×

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது

 

அவிநாசி, ஆக.13:பீகார் மாநிலத்தை சேர்ந்தவரிடம் பெருமாநல்லூர் அருகே செல்போனை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பெருமாநல்லூர் அருகே உள்ள தாண்டாகவுண்டன்புதூர் பகுதியில் குடியிருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது திருச்சியை சேர்ந்த திலோத் (22), கரூரை சேர்ந்த சண்முகவேல் (23), திருச்சியை சேர்ந்த விஷ்வா (22),அறிவழகன் (22) ஆகிய 4 பேரும் சேர்ந்து அவரது செல்போனை வழிப்பறி செய்து தப்பினர்.

இது குறித்து பாரத்சகினி பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாமகேஷ்வரி,அன்பரசன், கார்த்திகேயன், போலீசார் மயில்சாமி,சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Avinasi ,Bihar ,Perumanallur ,
× RELATED செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில...